Saturday, 5 August 2017

நட்புக்காக

வெள்ளி துளிகளினால்
மண்ணில் நனைவோம்
வண்ண கதிர்களினால்
வானில் வரிவோம்
காற்றாய் காட்டினிடையே
முகில் மூங்கில்
துளைகளினிடையே
பாடி தரிவோம்

இதுவரை நாம் பேசிடும்
மொழிகளில் நட்புடன் மகிழ்ந்தோம்
மௌனத்திலும் சில நேரம்
நம் அன்பை உணர்ந்தோம்
புது புது சுவை தினமும்
உணவில் ருசித்தோம்

கட்டியணைத்து தோலுரசி
அருகில் சில சமயம்
முகம் மறைத்த தொலைவில்
குரல் பதிவில் சில சமயம்

தொலைவிலிருந்தும் நெருக்கமாய்

பளிச்சிடும் சிரிப்பின்
கடைசி பற்களும்
நட்பின நினைவுகள் சொல்லும்

Thursday, 13 July 2017

தாமரை நீங்கிய கலையரசி


உயிரில்லா சதை பிண்டம்
உயிராக்கி சுமந்த கருப்பை
இன்று தன்னை சுமக்க வலு இழந்ததே

என்னை தாலட்டிய தாமரை இதழ்
இன்று என் இமை முன்
தாமரை நீங்கியும்
நீயே என்
கலையரசி......

Saturday, 20 May 2017

என் தனிமை

குளுமை மோதும்

சுவர்களுக்கிடையே

உருகும் மெழுகோடு

வெள்ளை காகிதம் கிலிக்கும்

பேனா முனையோடு ….

Sunday, 14 May 2017

நெஞ்சிலே

நெஞ்சிலே

உந்தன் ஞாபகம்!..

மெல்ல உன்னால்

என்னை இழக்கிறேன் ..

கொஞ்சமாய்

உற்றுப் பாரடி ...

என் கண்களில் நீயடி !

நீரடி...

Saturday, 13 May 2017

தாயே

தன்னுள் கலந்து

தன்னை கரைத்து

என்னை வளர்த்தாயே

Tuesday, 9 May 2017

பெண்ணானதோ

வான் விட்டு விண்மீன்
வனம் வந்ததோ
நீரோடு புளன்று ஓர் பெண்னானதோ!

கதிர் மோதி
மொட்டவிழும் மலர் போல
நீ சோம்பல் விரித்தாய்!

உன் இதழ் சுவைத்த
தேனீர் கோப்பை அனல் வீசும்..
நீ நடந்த
மண் சாலை மனம் வீசும்...

நித்தம் ஆயிரம் விழிகள்
நான் கடந்து சென்றேன்
ஆனால் இரு விழி மட்டும்
என் தடம் மறிப்பதேன்!

யாரும் அறியாமல் நீயும் கேட்காமல்
சில வார்த்தை சொன்னேன்
காற்றின் வழியே
நீ கேட்பாய் என்றே

நிலவின் ஒளியை குடுவையில் அடித்து
இரவில் தரவா
பணித்தீவை வெட்டி
சுடும் தீயில் இட்டு
அறையின் குளுமை சேர்க்கவா

நீ சுமக்கும் புத்தகம் நடுவில்
நீ தேடும் வரியில் ஒன்றாய்
நானும் மாறேனோ

காற்றில் கலையும் கற்றை கூந்தலில்
ஒற்றை நூலாய் மாறேனோ

நாளும் நூறு முறையேனும்
ஒத்திகை பார்த்தேன்
நேரில் உன்னிடம் சொல்ல
வரிகள் தொலைத்தேன்

Saturday, 6 May 2017

தீயில் எரிந்த கடிதம்


மடித்த கடிதம்
பிரித்து படிக்க
உதிரம் உரித்து
கடிதம் தந்தேன்!

விரித்த விழியில்
படித்த கடிதம்
தீயில் எரித்துப் போனாய் அன்பே!

Monday, 1 May 2017

நினைவு

நாட்கள் நீண்டு போகும்
வருடங்களின் நீளம் அதிகரிக்கும்
நினைவுகள் மட்டும்
நெஞ்சில் பத்திரமாகும்

Wednesday, 22 March 2017

நட்பு

நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை

இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது

 

நண்பா !

எத்தனை நினைவுகள் !

ஈர் நான்கு ஆண்டுகள்

என் நினைவலைகளுக்குள்

மிக ஆழமாய் நீண்டு கிடப்பது

நம் நட்பு மட்டுமே

 

 

கேலிஇத்து சிரித்த நாட்கள் பல

சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில

என் முதல் காதல் தோல்வியும் உன் இருதோள்களே தாங்கின

 

 

உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன

உன் தாய் தந்தையர் எனதுமாய்

உன் மனைவி எனது தங்கையாய்

உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்

 

 

இனி வரும் நாட்கள்

உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்

ஆனால்

இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்

 

இக்காகிதத்தை விரித்து பார்

இதில் உள்ள எழுத்துகள்

என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை

உன் இதழ் வழி சிரிப்பிலும்

உன் இமை நீரிலும்

நான் இருப்பேன்

Saturday, 18 March 2017

தூக்கம் தூவட்டுமா


விழிமேலே
விழிமேலே
ஒரு தூக்கம் நான் தூவட்டுமா
இரு இமைகள் இடையில்
ஒரு பாலம் ஆகட்டுமா
உன்
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.

மேகம் பிழிந்த
நீரெடுத்து
புலர் காலை மலரின் மேல் தெளித்து
நட்சத்திரங்களின்
நிழல் பதித்து
குயிலின் கீதம் 
தான் இசைத்து
உனக்கென ஓர் வரியில்

செந்தழல் நீரிலொரு 
பூவானதால் 
ஓர் பார்வையால் 
என் வேர் சாய்க்கிராய் 
பனி 
தீ மீதில் 
ஒரு துளியானதால் 
இதய குழாயில் 
புது நீர் பாய்ச்சினாய் 

நீர் மீது நீயும் 
இழைத் துவினாய்
இழை மீது ஊரும் 
ஓர் எறும்பாகிரறேன் 

Monday, 13 March 2017

உனக்கென சில வெண்பா

காலனி தொலைத்த சின்றெலா

சிரிப்பின் சொந்தக்காரி

நிழலிடம் மட்டுமே தோற்றுப்போகும் வீரச்சி

கனவுகள் நிறைந்த விழிகள்
வடுக்கள் மறைக்கும் உதடுகள்

பாரதி தூவிய தோட்டத்து விதையில்
மலர்ந்த சிறு பூ

கழுகின் சிறகு தேடும் சிட்டுக்குருவி

Wednesday, 8 March 2017

மகளிர் தின வாழ்த்துக்கள் - 2017

பாரினில் முதல் புரட்சி ஏவாள்
கடித்துமிழ்ந்த விதையன்றோ

வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி

வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்

சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்

ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை

நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு

Monday, 13 February 2017

தோழியெனில்

மழலை உன் உடல் மொழி
சிரிப்பின் சொந்தக்காரி

உன் இமை விட்டு இறங்கும்
கண்ணீர் துளிகள்
உன் இதழ் தொடும் முன்னே
அழுகையும்
கோபமும் மறைந்து போகும்
மாயம் கண்டு
நான் வியந்த நாட்கள் உண்டு

நான் வருந்தும் வேலைகளில்
என் இமை தேடும் பெண்களில்
நீயும் ஒருத்தி
எனது கவிகளின் முதல் ரசிகை நீ

வெறும் தோழியெனில்
என்றோ ஓர் நாள்
பிரிந்தோ
மறைந்தோ பேகும் காலம் வரும்
என் தமக்கையானாய்
என் பயணங்களில் உனக்கென
ஓர் தடம் நிச்சயம் விரியும்

Wednesday, 18 January 2017

ஏறு தழுவல்

நிலம் கீறி ஆழ புதையுண்ட
ஓர் விதை
விருட்சமாய் நிழல் தரும்
காலம் கனிந்தது
இங்கு புதயுண்டது
வெறும் விதையல்ல
எம் மூத்த குடியின் வீரமும் தான்
சுமக்கும் போது என் தமையன்
தழுவம்போது என் தோழன்
ஏறு தழுவல் எம் உரிமை
வீரம் எம் உடன் பிறந்தவை
தமிழ் எம் அடையாளம்
இது குற்றம் எனில்
எம் நக்கீரன் உரைத்ததுபோல்
நெற்றிக்கண் பொருந்தியவன்
செய்ததும் குற்றமே
ஆதி ஈசன் தழுவியதும்
காளையை அல்லவா
!!!!!
தமிழ் எம் அடையாளம்

Tuesday, 10 January 2017

நண்பா

நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை

இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது

 

நண்பா !

எத்தனை நினைவுகள் !

ஈர் நான்கு ஆண்டுகள்

என் நினைவலைகளுக்குள்

மிக ஆழமாய் நீண்டு கிடப்பது

நம் நட்பு மட்டுமே

 

 

கேலிஇத்து சிரித்த நாட்கள் பல

சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில

என் காதல் தோல்விகளையும் உன் இருதோள்களே தாங்கின

 

 

உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன

உன் தாய் தந்தையர் எனதுமாய்

உன் மனைவி எனது தங்கையாய்

உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்

 

 

இனி வரும் நாட்கள்

உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்

ஆனால்

இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்

 

இக்காகிதத்தை விரித்து பார்

இதில் உள்ள எழுத்துகள்

என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை

உன் இதழ் வழி சிரிப்பிலும்

உன் இமை நீரிலும்

நான் இருப்பேன்

கரு

விதையே உயிர்ப்பெறு
அணுவை பிளந்திடு
கருவாய் வளர்த்திடு

கனவுகள் தளிருமோ
நினைவுகள் மலருமோ
தாய் மடி மீதிலே
தவழ்ந்திடும் மழலை
சிரிப்பிலே
சுவடுகள் மாறுமோ...

ஒரு சிரிப்பு
முதல் மூச்சு
முதல் முத்தம்
முதல் சபரிசம்
வீணையின் தந்திகள் தேடும் பிஞ்சு விரல்கள்
தாமரை பாதங்கள்
ஒரு தாயின் தேடல்...

Thursday, 29 December 2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 0.2

இரவின் நீலம் திரட்டிய மை கொண்டு
உனக்கென
ஒரு சில வரிகள்.....

உன் தாயின்
கருவறை விட்டு
வீரிட்ட ஒளியோடு
தந்தையின்
கரம் மீது நதியாய்
நீ நெழிந்த நாள் இன்று

உனக்கும்
உன் தாய் தந்தையருக்கும்
இன்று ஒரே வயது

பூமி பந்தின் சுழற்சியும்
உன் மீது காதல் கொண்டே
தன் கடன் மறந்து
அந்த கதிரவனை ஓர் நாள்
தாமதமாய் சுற்றுகிறது ...

உனக்கென ஓர்
பரிசு தரமுடியாமல்
அந்த நிலவும்
கருங்காட்டில்
இன்று தன்னை
ஒளித்துக்கொள்ளும்
தேடிபார் அவன்
நுனி வால் தெரிந்தாலும் தெரியும்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

Monday, 5 December 2016

மகளே உறங்கு

ஓர் சிம்மத்தின்
கடைசி கர்ஜனை
வின்னில்
தன் ஒழியை மங்க செய்கிறது....

இப்புவி பணிகளால்
களித்துப்போன
உன்னை
தன் மடியோடு
சாய்த்துக்கொண்டாள் தாய் ஒருத்தி
மகளே உறங்கு...

ஆம் ஊர்
உன்ணை அம்மா என்ற போதும்
உன் மணம் தேடுவது
உன் அம்மாவை என்றறிவேன்
மகளே உறங்கு...

Thursday, 1 December 2016

இன்று மழை பெய்யும்

மார்கழி இதழை
முத்தம் இடும் தொலைவில்
கார்த்திகை மாதம்
கதிர் மறையும் முன்பனி காலம்
குளிரும் காற்று
இருகிய போர்வை
போதாத தூக்கம்
நாளிதழ் தேநீர் கோப்பை
துள்ளி குதிக்கும் மழலை கூட்டம்
(இன்று பள்ளிகள் விடுமுறை)

அலுவலகம் செல்லும்
பாதி வழியில்
மழை பீடித்தது
சாலை ஓரம் மழையை வெறித்தபடி
நின்றேன்
என்னோடு இன்னும் சிலரும்,
சிலர் மழையை திட்டவும் செய்தனர்

எப்போதும்
வாகன நெரிசலில்
ரீங்கரிக்கும் சாலை
இன்று புது இசை ஈன்றது
விழும் ஒவ்வொரு
மழைத்துளியும்
தனக்கென ஒரு
தாளத்தில் நடனம் ஆடியது

சிறு வயது நாட்கள்
என் நினைவலைகளை
வருடி சென்றது

செம்மன் குழம்பாகி
அள்ளி பூசிய நாட்கள் அவை
சிரிப்பில் எங்களோடு
போட்டியிட்டு
தோற்று போகும் மழை

நாட்கள் செல்ல செல்ல
அந்த சிறுவனின்
மன குதிரை கடிவாளங்கள்
இறுக்கி கட்டப்பட்டன

இன்று அந்த குதிரையின்
முடிச்சிகள்
ஒவ்வொன்றாய்
அவிழ்க்கப்படுகிறது

முடிந்து விட்ட போட்டியை
மீண்டும் அதே சிரிப்போடு
தொடங்கியது மழை
சிரிப்பின் ஒலி அதிகரித்தது

தேங்கி நின்ற மழை நீரில்
குதித்தேன்
எழுந்தேன்
விண் நோக்கி
முத்துகளை பறிக்க முயற்சித்தேன்
ஈர்ப்பு விசையால்
விழுந்தேன்
மீண்டும் முயற்சித்தேன்
என் அசைவுகள்
நடனம் ஆனது

சுற்றி இருந்த ஆந்தை கண்கள்
எனை வெறித்தது

மழையோடு
விளையாடி நடந்தேன்
களைத்து முடித்தோம்
(மழை நின்ற நொடிகள்)

அலுவலகம் செல்ல வேண்டும்
கணிப்பொறியின் விசைப்பலகை
என் விரல் தீண்ட காத்து கிடக்கும்

Wednesday, 20 April 2016

என் முதல் காதல்

மூடி வைத்த இதழ்களுக்குள்
அடைபட்ட மகரந்தமாய்
என் ஆசை அனைத்தும்
இதயத்தை கனக்குதடி

விழிகளுக்கும் கடிகாரத்திற்க்கும்
இடையே பந்தயம்
கடிகாரம் தோற்றுப்போணது
அறுபது வினாடிகளுக்குள்
எழுபது முறையேனும் கடிகாரம் பார்த்திருப்பேன்

உன்னோடு உரையாடி
அரை பொழுது ஆனதடி
இரவிலே உறக்கம்மில்லை
காலையில் உணவுமில்லை

இல்லையென்று உரைத்திருந்தால்
அக்கணமே மறந்திருப்பேன்
ஆம் என்று சொல்லியிருந்தால்
எத்திசையெனும் உனதருகில்
காற்று புகாது அனைத்திருப்பேன்
புரியாமல் பேசிவிட்டாய்
என்னை பிததனாய் ஆக்கிவிட்டாய்

நான் விரும்பும் ஊன் கூட
இன்றேனோ கசக்குதடி
நீ ரூசிக்கும் உணவு மட்டும்
என் நாவு கேட்குதடி

உன் தந்தை மீது நீ கொண்ட பாசம்
உன் மதிப்பை கூட்டுதடி
சொல்லிவிட்டு வா
உன்னோடு சேர்த்து
உன் தந்தையையும் காதலிப்பேன்....


Tuesday, 8 March 2016

நான் கடக்கும் பெண்கள்


உன் கருவறையின் கதகதப்பில் உயிர் தரித்தேன்
முலைப்பால் வடிகட்டிய உன் உதிரமே
என் முதல் உணவு
- என் தாய் நீ

என்னோடு நகைத்து அழுது சிணுங்கி விளையாடிய
- என் தங்கை நீ

என் பதின் பருவ பட்டாம்பூச்சிகளால்
- என் தேவதை நீ

என்னை ஆண் என என் கடன் யாதென
உணர்த்திய
- என் தோழி நீ

மனபந்தலில் உன்  கனவோடு
என் கனவையும் சேர்த்து சுமந்த
- என் மனைவி நீ

என்னவளின் கருவறையில் உயிர் தரித்த
- என் அங்கம் நீ

என் மீசை வழியே என் கர்வம் ஒட்டிக்கொண்ட போது
என்னுள் இருந்த
நான் மறந்த
என் மழலையை மீட்டெடுத்த
- என் உயிர் நீ

முதுமை சருகாக
மூன்று கால் ஊணும் போதும்
என்னை மடி மீது சாய்த்து கொள்ளும்
மீண்டும்
- என் தாயே நீ

பூமி பந்தின் சுழற்சியில்
உயிர்க்கொள்ளும் அனைத்துமே
[உன்]
பெண்பால் கொண்டே உயிர் தரித்தது

அவனின்றி வேண்டுமெனில் ஓர் அணுவும் அசைவின்றி போகும்
அவளின்றி ஓர் பொருளும் உயிர்க்கொள்ளாது

பேதை பெதும்பை
மங்கை மடந்தை
அரிவை தெரிவை
பேரிளம்பெண்
என அனைவருக்கும்
உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ....

Tuesday, 29 July 2014

நீ எங்கே அம்மா

உனை அன்றி நாளும்
ஒரு தெய்வம் என்றும்
விழி கண்டதில்லை அம்மா

இரவா பகலா
தெரியாமலே அம்மா
விழியில் வளர்த்தாய் என்னை

இரவொன்று பகலானதே
நீயும் எங்கே அம்மா

என் இடபுற முகமும்
உன் வல மடி தேடும்
தூக்கம் இன்றி
என் கண்கள் வாடும்!

கரம் தொடுகின்ற தொலைவிலே
அம்மா உன் பிம்பம்
கனவே நீயும் கலையாதே என்னை!

என் இதழோடு
உந்தன்
விரல் சோற்று பருக்கை
அமிர்தம் கூட
அதை தாண்டி என்பேன் ..

Friday, 6 June 2014

கருமை தீட்டும் இரவின் ஓரம்

கருமை தீட்டும்
இரவின் ஓரம்
மேகம் தூவும் சாரல் வீசும்

இரவின் தொடக்கமா
இது காதல் பயணமா
முடிவின் நொடிகளில் இது மீண்டும் தொடங்குமா

அறையின் குளுமையும்
இங்கு அனல் போல் வீசுதே
கரங்கள் இணைகையில்
காதல் மீளுதே
படுக்கை அறையின் நீலம் குறைந்திடுதே

இமைகள் கூறும் கவிதைகள்
நம் இதழகள் எழுதி ருசித்தது
இலை உதிர் கால மரங்களாய்
என் பெண்மை இங்கே உடையுதே அன்பே

மோகம் துளிர் விட தொடுங்குதே
அச்சம் இரு புறம் சூழுதே
ஆண் என்ற திமிரும் ஒடுங்குதே அன்பே

மஞ்சள் பூசுதே
அடி வானம் சிவக்குதே
ஆடை தேடியே என் கரங்கள் அலையுதே
உதவிட வா என் அன்பே

தேனீர் கோப்பையில்
புது சுவைதான் கூடுதே
உன் இதழ்கள் சுவைதத்தா
நம் இதழகள் சுவைதத்தாலா அன்பே

Thursday, 20 February 2014

tamilum pennum



தொல்காப்பியர் எழுதிய 

இலக்கணம் என் முன்
வெண்பா வை உன்னை
 
நேர் சேர் பார்த்தேன்
குறில் நெடில் சேர்த்து உன்
 
பெயர்சொல் நீயே

விகாரம் வேண்டாம்
திசைசொல் காட்டு

அவள்

வெண் சங்கை குழைத்து
அள்ளிட்ட தங்கம்
பாலோடு மஞ்சள்
சேர்த்து இட்ட மேனி

இயலோடு இசயும் தமிழும்
ஒரு பெண்ணாக உருவம் மலரும்
என் கண்ணோடு கவியும் இடரும்
நெஞ்சொடு உன் நினைவும் பிசயும்

தாயும் இல்லை

கண்ணீரும் அழுது அழுது
தீர்ந்த பின்னும்
தாயும் இல்லை

இருளறையின் தவறுகளால்
கருவறையில் தண்டனை ஏன்



Tuesday, 4 February 2014

விடியும் காலை உந்தன் மடியில்

விடியும் காலை உந்தன் மடியில் வேண்டும்
இரவின் இருளும் உந்தன் விழியில் வேண்டும்
என் கரம் உன் கரத்தோடு
என்னை உன் தோளில் சாய்த்திடு
                             
தோளிலே உன்னை சாய்த்திட
தோழானாய் நானும் இல்லை
மடியிலே உன்னை சாய்க்கிறேன்
தாய் என நானும் கொஞ்சம்
                             
விண் மீன்கள் இரண்டு
உந்தன் விழிகளில் அசைந்தாடுதோ
கரு மேகங்கள் ஒன்று கூடியே
உந்தன் விழிகளில் மை தீட்டுதோ
                             
இன்றிலும் இந்த வார்த்தையை
எந்த கவியிலும் நான் கேட்கவில்லை

இதுவரை எந்த கவிஞனும்
இந்த விழிகளை பார்த்ததில்லை

மாறன் நெஞ்சம் இது
வெண்பா வை மஞ்சம் ஆனது

வெண்பாவை தஞ்சம் கொள்ளவே
மாறன் நெஞ்சும் ஆனது

உன் கூந்தல் வாசம் தேடியே
பூ எல்லாம் முகர்ந்து பார்க்கிறேன்
பூ எல்லாம் படைத்த பூ வாசம்
என்றே வியந்து போகிறேன்

இடை மீது கொடியா
உந்தன் விரல் சொல்லும் படியா
எந்தன் உடை ஆனது

இழை மீது துளியா
உந்தன் இதழ் மீது துளியா
எந்தன் இதழ் அருந்தவோ

Sunday, 2 February 2014

என் கரம் உன் கரத்தோடு

F              :               என் கரம் உன் கரத்தோடு
                                என்னை உன் தோளில் சாய்த்திடு
                               
M            :               தோளிலே உன்னை சாய்த்திட
                                தோழானாய் நானும் இல்லை
                               
M            :               மடியிலே உன்னை சாய்க்கிறேன்
                                தாய் என நானும் கொஞ்சம்
                               
M            :               கரு மேகங்கள் ஒன்று கூடியே
                                உந்தன் விழிகளில் மை தீட்டியதோ
                               
F              :               இன்றிலும் இந்த வார்த்தையை எந்த கவியிலும்
                                நான் கேட்கவில்லை
                               
M            :               இதுவரை எந்த கவிஞனும் இந்த விழிகளை

                                பார்த்ததில்லை

Wednesday, 29 January 2014

இழை சிந்தும் சாலையில்

இழை சிந்தும் சாலையில்
ஒரு சாரல் பயணம் போக
வெயிலின் ஜீவாலையும்
குளிரும் காற்றானதே !

மழை துளி தாங்கிடும்
ஒரு குடை என மாறினேன் ..

உன் இதழ் தமிழ் கேட்டிட
என் உயிர் வரி தருகிறேன் !

நூலில் கோத்த பூவாய்
என்னுள்
நீயும் ஆகிறாய.!!!!!!!!!!!!!!

நூலிழை பட்டம் போல்
நீ வருவதை ரசிக்கிறேன்


காற்றில்
கையை அட்டும்
பாவை உன்னால்

ஒரு  பொம்மை ஆகிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன்னுள் எவ்வொரு நாளும் என்றோ
மறந்து போகும்
இவ்வொரு நாள் தவிர
உன் வாழ்வு தொடங்கிய முதல் நாள்
உன் தாய் தந்தையின் முதல் நாள்
இப்புவி காற்றும் உன் மூச்சு காற்றும்
காதலிக்க தொடங்கிய முதல் நாள்

உனக்கென்ன பரிசாய் தருவது
பரிசு எதுவாயுனும் உன் பிறந்த நாளில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

இன்று இந் தாய் தமிழ் கவி இன்றி
வேறொன்றும் ஜனனம் இல்லை...

---- பிறந்த நாள் வாழ்த்துக்கள்---- 

Sunday, 12 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல் பாடணும்
பொங்க வச்சி ஆடணும்
தை மாசம் ஒன்னாம் தேதி
ஊரோடு கூடணும்
மச்சானுக்கு சொல்லணும்
மாமனுக்கு கையால பொங்க  அள்ளி  ஊட்டனும்

கரும்போடு தோரணம் வாசலில கட்டனும்
மஞ்சள்ஓடு குங்குமம்
மாட்டுக்கு பூசணும்
நெல்ல தொட்டு வணங்கனும்
வயல தொட்டு வணங்கனும்
நன்றியோட சூரியன
வாசலில வணங்கனும்

மாமனோடு மயில காளை
மல்லுகட்டும் வேலையில
அவரோட வீரத்த
ஊரே புகழயில
மச்சா……………………னு
கததும்போது வெட்கம் தாலல
எனக்கு வெட்கம் தாலல

வேம்பு வெட்டி விரகாக்கி
மண்பான பொங்கல் இட்டு
உரவோடு சேந்து பொங்கும் போது
பொங்கலோ பொங்கல் சொன்னோம்
நாங்க அப்போ

கேஸ் அடுப்ப வச்சிக்கிட்டு
குக்கருள பொங்க வச்சி
பொங்கமலே பொங்கலுங்குரோம்
இப்போ

வீட்ட விட்டு வெளியேரி
விடியும் வரை விளையாடி
வேர்வயில குளிச்சோம்
நாங்கஅப்போ

வீட்டுக்குல ஒளிஞ்சிக்கிட்டு
திரைய மட்டும் பாத்துக்கிட்டு
பொங்காலா ? னு கேக்குறோம்
இப்போ

தமிழோட திருவிழா
தமிழனோட திருவிழா
தமிழா உன் திருவிழா
தமிழா நம் திருவிழா

பொங்கலோ பொங்கல் பாடுவோம்
பொங்க வச்சி ஆடுவோம்




எழுத்துக்கள்
        செ. கோபி

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...