Wednesday, 18 January 2017

ஏறு தழுவல்

நிலம் கீறி ஆழ புதையுண்ட
ஓர் விதை
விருட்சமாய் நிழல் தரும்
காலம் கனிந்தது
இங்கு புதயுண்டது
வெறும் விதையல்ல
எம் மூத்த குடியின் வீரமும் தான்
சுமக்கும் போது என் தமையன்
தழுவம்போது என் தோழன்
ஏறு தழுவல் எம் உரிமை
வீரம் எம் உடன் பிறந்தவை
தமிழ் எம் அடையாளம்
இது குற்றம் எனில்
எம் நக்கீரன் உரைத்ததுபோல்
நெற்றிக்கண் பொருந்தியவன்
செய்ததும் குற்றமே
ஆதி ஈசன் தழுவியதும்
காளையை அல்லவா
!!!!!
தமிழ் எம் அடையாளம்

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...