குளுமை மோதும்
சுவர்களுக்கிடையே
உருகும் மெழுகோடு
வெள்ளை காகிதம் கிலிக்கும்
பேனா முனையோடு ….
குளுமை மோதும்
சுவர்களுக்கிடையே
உருகும் மெழுகோடு
வெள்ளை காகிதம் கிலிக்கும்
பேனா முனையோடு ….
நெஞ்சிலே
உந்தன் ஞாபகம்!..
மெல்ல உன்னால்
என்னை இழக்கிறேன் ..
கொஞ்சமாய்
உற்றுப் பாரடி ...
என் கண்களில் நீயடி !
நீரடி...
வான் விட்டு விண்மீன்
வனம் வந்ததோ
நீரோடு புளன்று ஓர் பெண்னானதோ!
கதிர் மோதி
மொட்டவிழும் மலர் போல
நீ சோம்பல் விரித்தாய்!
உன் இதழ் சுவைத்த
தேனீர் கோப்பை அனல் வீசும்..
நீ நடந்த
மண் சாலை மனம் வீசும்...
நித்தம் ஆயிரம் விழிகள்
நான் கடந்து சென்றேன்
ஆனால் இரு விழி மட்டும்
என் தடம் மறிப்பதேன்!
யாரும் அறியாமல் நீயும் கேட்காமல்
சில வார்த்தை சொன்னேன்
காற்றின் வழியே
நீ கேட்பாய் என்றே
நிலவின் ஒளியை குடுவையில் அடித்து
இரவில் தரவா
பணித்தீவை வெட்டி
சுடும் தீயில் இட்டு
அறையின் குளுமை சேர்க்கவா
நீ சுமக்கும் புத்தகம் நடுவில்
நீ தேடும் வரியில் ஒன்றாய்
நானும் மாறேனோ
காற்றில் கலையும் கற்றை கூந்தலில்
ஒற்றை நூலாய் மாறேனோ
நாளும் நூறு முறையேனும்
ஒத்திகை பார்த்தேன்
நேரில் உன்னிடம் சொல்ல
வரிகள் தொலைத்தேன்
மடித்த கடிதம்
பிரித்து படிக்க
உதிரம் உரித்து
கடிதம் தந்தேன்!
விரித்த விழியில்
படித்த கடிதம்
தீயில் எரித்துப் போனாய் அன்பே!
வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...