Tuesday, 29 July 2014

நீ எங்கே அம்மா

உனை அன்றி நாளும்
ஒரு தெய்வம் என்றும்
விழி கண்டதில்லை அம்மா

இரவா பகலா
தெரியாமலே அம்மா
விழியில் வளர்த்தாய் என்னை

இரவொன்று பகலானதே
நீயும் எங்கே அம்மா

என் இடபுற முகமும்
உன் வல மடி தேடும்
தூக்கம் இன்றி
என் கண்கள் வாடும்!

கரம் தொடுகின்ற தொலைவிலே
அம்மா உன் பிம்பம்
கனவே நீயும் கலையாதே என்னை!

என் இதழோடு
உந்தன்
விரல் சோற்று பருக்கை
அமிர்தம் கூட
அதை தாண்டி என்பேன் ..

Friday, 6 June 2014

கருமை தீட்டும் இரவின் ஓரம்

கருமை தீட்டும்
இரவின் ஓரம்
மேகம் தூவும் சாரல் வீசும்

இரவின் தொடக்கமா
இது காதல் பயணமா
முடிவின் நொடிகளில் இது மீண்டும் தொடங்குமா

அறையின் குளுமையும்
இங்கு அனல் போல் வீசுதே
கரங்கள் இணைகையில்
காதல் மீளுதே
படுக்கை அறையின் நீலம் குறைந்திடுதே

இமைகள் கூறும் கவிதைகள்
நம் இதழகள் எழுதி ருசித்தது
இலை உதிர் கால மரங்களாய்
என் பெண்மை இங்கே உடையுதே அன்பே

மோகம் துளிர் விட தொடுங்குதே
அச்சம் இரு புறம் சூழுதே
ஆண் என்ற திமிரும் ஒடுங்குதே அன்பே

மஞ்சள் பூசுதே
அடி வானம் சிவக்குதே
ஆடை தேடியே என் கரங்கள் அலையுதே
உதவிட வா என் அன்பே

தேனீர் கோப்பையில்
புது சுவைதான் கூடுதே
உன் இதழ்கள் சுவைதத்தா
நம் இதழகள் சுவைதத்தாலா அன்பே

Thursday, 20 February 2014

tamilum pennum



தொல்காப்பியர் எழுதிய 

இலக்கணம் என் முன்
வெண்பா வை உன்னை
 
நேர் சேர் பார்த்தேன்
குறில் நெடில் சேர்த்து உன்
 
பெயர்சொல் நீயே

விகாரம் வேண்டாம்
திசைசொல் காட்டு

அவள்

வெண் சங்கை குழைத்து
அள்ளிட்ட தங்கம்
பாலோடு மஞ்சள்
சேர்த்து இட்ட மேனி

இயலோடு இசயும் தமிழும்
ஒரு பெண்ணாக உருவம் மலரும்
என் கண்ணோடு கவியும் இடரும்
நெஞ்சொடு உன் நினைவும் பிசயும்

தாயும் இல்லை

கண்ணீரும் அழுது அழுது
தீர்ந்த பின்னும்
தாயும் இல்லை

இருளறையின் தவறுகளால்
கருவறையில் தண்டனை ஏன்



Tuesday, 4 February 2014

விடியும் காலை உந்தன் மடியில்

விடியும் காலை உந்தன் மடியில் வேண்டும்
இரவின் இருளும் உந்தன் விழியில் வேண்டும்
என் கரம் உன் கரத்தோடு
என்னை உன் தோளில் சாய்த்திடு
                             
தோளிலே உன்னை சாய்த்திட
தோழானாய் நானும் இல்லை
மடியிலே உன்னை சாய்க்கிறேன்
தாய் என நானும் கொஞ்சம்
                             
விண் மீன்கள் இரண்டு
உந்தன் விழிகளில் அசைந்தாடுதோ
கரு மேகங்கள் ஒன்று கூடியே
உந்தன் விழிகளில் மை தீட்டுதோ
                             
இன்றிலும் இந்த வார்த்தையை
எந்த கவியிலும் நான் கேட்கவில்லை

இதுவரை எந்த கவிஞனும்
இந்த விழிகளை பார்த்ததில்லை

மாறன் நெஞ்சம் இது
வெண்பா வை மஞ்சம் ஆனது

வெண்பாவை தஞ்சம் கொள்ளவே
மாறன் நெஞ்சும் ஆனது

உன் கூந்தல் வாசம் தேடியே
பூ எல்லாம் முகர்ந்து பார்க்கிறேன்
பூ எல்லாம் படைத்த பூ வாசம்
என்றே வியந்து போகிறேன்

இடை மீது கொடியா
உந்தன் விரல் சொல்லும் படியா
எந்தன் உடை ஆனது

இழை மீது துளியா
உந்தன் இதழ் மீது துளியா
எந்தன் இதழ் அருந்தவோ

Sunday, 2 February 2014

என் கரம் உன் கரத்தோடு

F              :               என் கரம் உன் கரத்தோடு
                                என்னை உன் தோளில் சாய்த்திடு
                               
M            :               தோளிலே உன்னை சாய்த்திட
                                தோழானாய் நானும் இல்லை
                               
M            :               மடியிலே உன்னை சாய்க்கிறேன்
                                தாய் என நானும் கொஞ்சம்
                               
M            :               கரு மேகங்கள் ஒன்று கூடியே
                                உந்தன் விழிகளில் மை தீட்டியதோ
                               
F              :               இன்றிலும் இந்த வார்த்தையை எந்த கவியிலும்
                                நான் கேட்கவில்லை
                               
M            :               இதுவரை எந்த கவிஞனும் இந்த விழிகளை

                                பார்த்ததில்லை

Wednesday, 29 January 2014

இழை சிந்தும் சாலையில்

இழை சிந்தும் சாலையில்
ஒரு சாரல் பயணம் போக
வெயிலின் ஜீவாலையும்
குளிரும் காற்றானதே !

மழை துளி தாங்கிடும்
ஒரு குடை என மாறினேன் ..

உன் இதழ் தமிழ் கேட்டிட
என் உயிர் வரி தருகிறேன் !

நூலில் கோத்த பூவாய்
என்னுள்
நீயும் ஆகிறாய.!!!!!!!!!!!!!!

நூலிழை பட்டம் போல்
நீ வருவதை ரசிக்கிறேன்


காற்றில்
கையை அட்டும்
பாவை உன்னால்

ஒரு  பொம்மை ஆகிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன்னுள் எவ்வொரு நாளும் என்றோ
மறந்து போகும்
இவ்வொரு நாள் தவிர
உன் வாழ்வு தொடங்கிய முதல் நாள்
உன் தாய் தந்தையின் முதல் நாள்
இப்புவி காற்றும் உன் மூச்சு காற்றும்
காதலிக்க தொடங்கிய முதல் நாள்

உனக்கென்ன பரிசாய் தருவது
பரிசு எதுவாயுனும் உன் பிறந்த நாளில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

இன்று இந் தாய் தமிழ் கவி இன்றி
வேறொன்றும் ஜனனம் இல்லை...

---- பிறந்த நாள் வாழ்த்துக்கள்---- 

Sunday, 12 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல் பாடணும்
பொங்க வச்சி ஆடணும்
தை மாசம் ஒன்னாம் தேதி
ஊரோடு கூடணும்
மச்சானுக்கு சொல்லணும்
மாமனுக்கு கையால பொங்க  அள்ளி  ஊட்டனும்

கரும்போடு தோரணம் வாசலில கட்டனும்
மஞ்சள்ஓடு குங்குமம்
மாட்டுக்கு பூசணும்
நெல்ல தொட்டு வணங்கனும்
வயல தொட்டு வணங்கனும்
நன்றியோட சூரியன
வாசலில வணங்கனும்

மாமனோடு மயில காளை
மல்லுகட்டும் வேலையில
அவரோட வீரத்த
ஊரே புகழயில
மச்சா……………………னு
கததும்போது வெட்கம் தாலல
எனக்கு வெட்கம் தாலல

வேம்பு வெட்டி விரகாக்கி
மண்பான பொங்கல் இட்டு
உரவோடு சேந்து பொங்கும் போது
பொங்கலோ பொங்கல் சொன்னோம்
நாங்க அப்போ

கேஸ் அடுப்ப வச்சிக்கிட்டு
குக்கருள பொங்க வச்சி
பொங்கமலே பொங்கலுங்குரோம்
இப்போ

வீட்ட விட்டு வெளியேரி
விடியும் வரை விளையாடி
வேர்வயில குளிச்சோம்
நாங்கஅப்போ

வீட்டுக்குல ஒளிஞ்சிக்கிட்டு
திரைய மட்டும் பாத்துக்கிட்டு
பொங்காலா ? னு கேக்குறோம்
இப்போ

தமிழோட திருவிழா
தமிழனோட திருவிழா
தமிழா உன் திருவிழா
தமிழா நம் திருவிழா

பொங்கலோ பொங்கல் பாடுவோம்
பொங்க வச்சி ஆடுவோம்




எழுத்துக்கள்
        செ. கோபி

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...