Tuesday, 8 March 2016

நான் கடக்கும் பெண்கள்


உன் கருவறையின் கதகதப்பில் உயிர் தரித்தேன்
முலைப்பால் வடிகட்டிய உன் உதிரமே
என் முதல் உணவு
- என் தாய் நீ

என்னோடு நகைத்து அழுது சிணுங்கி விளையாடிய
- என் தங்கை நீ

என் பதின் பருவ பட்டாம்பூச்சிகளால்
- என் தேவதை நீ

என்னை ஆண் என என் கடன் யாதென
உணர்த்திய
- என் தோழி நீ

மனபந்தலில் உன்  கனவோடு
என் கனவையும் சேர்த்து சுமந்த
- என் மனைவி நீ

என்னவளின் கருவறையில் உயிர் தரித்த
- என் அங்கம் நீ

என் மீசை வழியே என் கர்வம் ஒட்டிக்கொண்ட போது
என்னுள் இருந்த
நான் மறந்த
என் மழலையை மீட்டெடுத்த
- என் உயிர் நீ

முதுமை சருகாக
மூன்று கால் ஊணும் போதும்
என்னை மடி மீது சாய்த்து கொள்ளும்
மீண்டும்
- என் தாயே நீ

பூமி பந்தின் சுழற்சியில்
உயிர்க்கொள்ளும் அனைத்துமே
[உன்]
பெண்பால் கொண்டே உயிர் தரித்தது

அவனின்றி வேண்டுமெனில் ஓர் அணுவும் அசைவின்றி போகும்
அவளின்றி ஓர் பொருளும் உயிர்க்கொள்ளாது

பேதை பெதும்பை
மங்கை மடந்தை
அரிவை தெரிவை
பேரிளம்பெண்
என அனைவருக்கும்
உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ....

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...