Wednesday, 22 March 2017

நட்பு

நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை

இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது

 

நண்பா !

எத்தனை நினைவுகள் !

ஈர் நான்கு ஆண்டுகள்

என் நினைவலைகளுக்குள்

மிக ஆழமாய் நீண்டு கிடப்பது

நம் நட்பு மட்டுமே

 

 

கேலிஇத்து சிரித்த நாட்கள் பல

சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில

என் முதல் காதல் தோல்வியும் உன் இருதோள்களே தாங்கின

 

 

உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன

உன் தாய் தந்தையர் எனதுமாய்

உன் மனைவி எனது தங்கையாய்

உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்

 

 

இனி வரும் நாட்கள்

உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்

ஆனால்

இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்

 

இக்காகிதத்தை விரித்து பார்

இதில் உள்ள எழுத்துகள்

என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை

உன் இதழ் வழி சிரிப்பிலும்

உன் இமை நீரிலும்

நான் இருப்பேன்

Saturday, 18 March 2017

தூக்கம் தூவட்டுமா


விழிமேலே
விழிமேலே
ஒரு தூக்கம் நான் தூவட்டுமா
இரு இமைகள் இடையில்
ஒரு பாலம் ஆகட்டுமா
உன்
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.

மேகம் பிழிந்த
நீரெடுத்து
புலர் காலை மலரின் மேல் தெளித்து
நட்சத்திரங்களின்
நிழல் பதித்து
குயிலின் கீதம் 
தான் இசைத்து
உனக்கென ஓர் வரியில்

செந்தழல் நீரிலொரு 
பூவானதால் 
ஓர் பார்வையால் 
என் வேர் சாய்க்கிராய் 
பனி 
தீ மீதில் 
ஒரு துளியானதால் 
இதய குழாயில் 
புது நீர் பாய்ச்சினாய் 

நீர் மீது நீயும் 
இழைத் துவினாய்
இழை மீது ஊரும் 
ஓர் எறும்பாகிரறேன் 

Monday, 13 March 2017

உனக்கென சில வெண்பா

காலனி தொலைத்த சின்றெலா

சிரிப்பின் சொந்தக்காரி

நிழலிடம் மட்டுமே தோற்றுப்போகும் வீரச்சி

கனவுகள் நிறைந்த விழிகள்
வடுக்கள் மறைக்கும் உதடுகள்

பாரதி தூவிய தோட்டத்து விதையில்
மலர்ந்த சிறு பூ

கழுகின் சிறகு தேடும் சிட்டுக்குருவி

Wednesday, 8 March 2017

மகளிர் தின வாழ்த்துக்கள் - 2017

பாரினில் முதல் புரட்சி ஏவாள்
கடித்துமிழ்ந்த விதையன்றோ

வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி

வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்

சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்

ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை

நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...