Wednesday, 8 March 2017

மகளிர் தின வாழ்த்துக்கள் - 2017

பாரினில் முதல் புரட்சி ஏவாள்
கடித்துமிழ்ந்த விதையன்றோ

வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி

வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்

சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்

ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை

நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...