நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை
இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது
நண்பா !
எத்தனை நினைவுகள் !
ஈர் நான்கு ஆண்டுகள்
என் நினைவலைகளுக்குள்
மிக ஆழமாய் நீண்டு கிடப்பது
நம் நட்பு மட்டுமே
கேலிஇத்து சிரித்த நாட்கள் பல
சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில
என் காதல் தோல்விகளையும் உன் இருதோள்களே தாங்கின
உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன
உன் தாய் தந்தையர் எனதுமாய்
உன் மனைவி எனது தங்கையாய்
உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்
இனி வரும் நாட்கள்
உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்
ஆனால்
இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்
இக்காகிதத்தை விரித்து பார்
இதில் உள்ள எழுத்துகள்
என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை
உன் இதழ் வழி சிரிப்பிலும்
உன் இமை நீரிலும்
நான் இருப்பேன்