விதையே உயிர்ப்பெறு
அணுவை பிளந்திடு
கருவாய் வளர்த்திடு
கனவுகள் தளிருமோ
நினைவுகள் மலருமோ
தாய் மடி மீதிலே
தவழ்ந்திடும் மழலை
சிரிப்பிலே
சுவடுகள் மாறுமோ...
ஒரு சிரிப்பு
முதல் மூச்சு
முதல் முத்தம்
முதல் சபரிசம்
வீணையின் தந்திகள் தேடும் பிஞ்சு விரல்கள்
தாமரை பாதங்கள்
ஒரு தாயின் தேடல்...
No comments:
Post a Comment