Thursday, 20 February 2014

tamilum pennum



தொல்காப்பியர் எழுதிய 

இலக்கணம் என் முன்
வெண்பா வை உன்னை
 
நேர் சேர் பார்த்தேன்
குறில் நெடில் சேர்த்து உன்
 
பெயர்சொல் நீயே

விகாரம் வேண்டாம்
திசைசொல் காட்டு

அவள்

வெண் சங்கை குழைத்து
அள்ளிட்ட தங்கம்
பாலோடு மஞ்சள்
சேர்த்து இட்ட மேனி

இயலோடு இசயும் தமிழும்
ஒரு பெண்ணாக உருவம் மலரும்
என் கண்ணோடு கவியும் இடரும்
நெஞ்சொடு உன் நினைவும் பிசயும்

தாயும் இல்லை

கண்ணீரும் அழுது அழுது
தீர்ந்த பின்னும்
தாயும் இல்லை

இருளறையின் தவறுகளால்
கருவறையில் தண்டனை ஏன்



Tuesday, 4 February 2014

விடியும் காலை உந்தன் மடியில்

விடியும் காலை உந்தன் மடியில் வேண்டும்
இரவின் இருளும் உந்தன் விழியில் வேண்டும்
என் கரம் உன் கரத்தோடு
என்னை உன் தோளில் சாய்த்திடு
                             
தோளிலே உன்னை சாய்த்திட
தோழானாய் நானும் இல்லை
மடியிலே உன்னை சாய்க்கிறேன்
தாய் என நானும் கொஞ்சம்
                             
விண் மீன்கள் இரண்டு
உந்தன் விழிகளில் அசைந்தாடுதோ
கரு மேகங்கள் ஒன்று கூடியே
உந்தன் விழிகளில் மை தீட்டுதோ
                             
இன்றிலும் இந்த வார்த்தையை
எந்த கவியிலும் நான் கேட்கவில்லை

இதுவரை எந்த கவிஞனும்
இந்த விழிகளை பார்த்ததில்லை

மாறன் நெஞ்சம் இது
வெண்பா வை மஞ்சம் ஆனது

வெண்பாவை தஞ்சம் கொள்ளவே
மாறன் நெஞ்சும் ஆனது

உன் கூந்தல் வாசம் தேடியே
பூ எல்லாம் முகர்ந்து பார்க்கிறேன்
பூ எல்லாம் படைத்த பூ வாசம்
என்றே வியந்து போகிறேன்

இடை மீது கொடியா
உந்தன் விரல் சொல்லும் படியா
எந்தன் உடை ஆனது

இழை மீது துளியா
உந்தன் இதழ் மீது துளியா
எந்தன் இதழ் அருந்தவோ

Sunday, 2 February 2014

என் கரம் உன் கரத்தோடு

F              :               என் கரம் உன் கரத்தோடு
                                என்னை உன் தோளில் சாய்த்திடு
                               
M            :               தோளிலே உன்னை சாய்த்திட
                                தோழானாய் நானும் இல்லை
                               
M            :               மடியிலே உன்னை சாய்க்கிறேன்
                                தாய் என நானும் கொஞ்சம்
                               
M            :               கரு மேகங்கள் ஒன்று கூடியே
                                உந்தன் விழிகளில் மை தீட்டியதோ
                               
F              :               இன்றிலும் இந்த வார்த்தையை எந்த கவியிலும்
                                நான் கேட்கவில்லை
                               
M            :               இதுவரை எந்த கவிஞனும் இந்த விழிகளை

                                பார்த்ததில்லை

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...