Sunday, 12 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல் பாடணும்
பொங்க வச்சி ஆடணும்
தை மாசம் ஒன்னாம் தேதி
ஊரோடு கூடணும்
மச்சானுக்கு சொல்லணும்
மாமனுக்கு கையால பொங்க  அள்ளி  ஊட்டனும்

கரும்போடு தோரணம் வாசலில கட்டனும்
மஞ்சள்ஓடு குங்குமம்
மாட்டுக்கு பூசணும்
நெல்ல தொட்டு வணங்கனும்
வயல தொட்டு வணங்கனும்
நன்றியோட சூரியன
வாசலில வணங்கனும்

மாமனோடு மயில காளை
மல்லுகட்டும் வேலையில
அவரோட வீரத்த
ஊரே புகழயில
மச்சா……………………னு
கததும்போது வெட்கம் தாலல
எனக்கு வெட்கம் தாலல

வேம்பு வெட்டி விரகாக்கி
மண்பான பொங்கல் இட்டு
உரவோடு சேந்து பொங்கும் போது
பொங்கலோ பொங்கல் சொன்னோம்
நாங்க அப்போ

கேஸ் அடுப்ப வச்சிக்கிட்டு
குக்கருள பொங்க வச்சி
பொங்கமலே பொங்கலுங்குரோம்
இப்போ

வீட்ட விட்டு வெளியேரி
விடியும் வரை விளையாடி
வேர்வயில குளிச்சோம்
நாங்கஅப்போ

வீட்டுக்குல ஒளிஞ்சிக்கிட்டு
திரைய மட்டும் பாத்துக்கிட்டு
பொங்காலா ? னு கேக்குறோம்
இப்போ

தமிழோட திருவிழா
தமிழனோட திருவிழா
தமிழா உன் திருவிழா
தமிழா நம் திருவிழா

பொங்கலோ பொங்கல் பாடுவோம்
பொங்க வச்சி ஆடுவோம்




எழுத்துக்கள்
        செ. கோபி

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...